உலகம்

இந்தியர்கள் மூவருக்கு கனடாவின் உயரிய விருது

57views

கனடாவில் வாழும் மூன்று இந்தியர்களுக்கு அந்நாட்டின் உயரிய ‘ஆர்டர் ஆப் கனடா’ விருது வழங்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு ‘ஆர்டர் ஆப் கனடா’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெறுவதற்க 135 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மூன்று இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச அளவில் பிரலமான விஞ்ஞானி டாக்டர் வைகுண்டம் அய்யர் லட்சுமணன், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் பாப் சில் தில்லான் எனப்படும் நவ்ஜீத் சிங் தில்லான், குழந்தைகள் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரதீப் மெர்ச்சன்ட் ஆகிய மூன்று இந்தியர்கள் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தங்கள் துறைகளில் சிறந்து விளங்கி கனடாவுக்கு பெருமை சேர்த்ததுடன், சமூக நல பணிகளில் ஈடுபட்டதற்காகவும் இவர்கள் மூவரும் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கனடா அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!