விளையாட்டு

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

46views

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது .கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு போல் கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கிறது.

இந்த தொடரில்  இன்று நடைபெற்ற  ஆட்டத்தில்  ஒடிசா -ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் -ஜாம்ஷெட்பூர் அணியின் பீட்டர் ஹார்ட்லி அந்த அணியின் முதல் கோல் அடித்தார்.

அதன் பிறகு ஜாம்ஷெட்பூர் அணியின் கிரெக் ஸ்டீவர்ட் கோல் மழை பொழிந்தார். ஆட்டத்தின்  4-வது ,21-வது மற்றும்  35-வது நிமிடத்தில் கிரெக் ஸ்டீவர்ட் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல் அடித்தார். இதனால் ஜாம்ஷெட்பூர் அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதி வரை ஒடிசா அணி ஒரு கோல் கூட அடிக்காத காரணத்தால் ஜாம்ஷெட்பூர் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!