உலகம்

இது ஒரு எச்சரிக்கை மணி.. ஒமிக்ரான் வகை வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இருக்கு. விஞ்ஞானி சொன்ன அதிர்ச்சி தகவல்.

98views

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் மாறுபாடு, உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது..

இதுவரை கண்டறியப்பட்ட மாறுபாடுகளில் இதுதான் மோசமான மாறுபாடு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. மேலும் பல்வேறு நாடுகள் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளன.. இந்தியாவிலும் கூட விமான நிலையங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன.. இந்த மாறுபாடு இதுவரை சுமார் 40 நாடுகளில் பரவி உள்ளது..

இதனிடையே பெங்களூருவை சேர்ந்த இருவர், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் என இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஒமிக்ரான் மாறுபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. அதில் வெளிநாடு பயண வரலாறு இல்லாத பெங்களூருவில் வசித்து வரும் 46 வயதானஒருவருக்கும் ஒமிக்ரான் இருப்பது உறுதியானது..

இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே இந்தியாவில் இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) முன்னாள் இயக்குனர் ராகேஷ் மிஷ்ரா, ஒமிக்ரான் மாறுபாடு விமான நிலையங்களில் இருந்து வருவது மட்டுமல்ல.. ஏற்கனவே அனைத்து முக்கிய நகரங்களிலும் இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.. இருப்பினும் இந்த மாறுபாடு மிகக் குறைவான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும், எனவே சமூகப் பரவல் அதிகரிக்க சாத்தியக்கூறு இருந்தபோதிலும், இது இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் ” அனைத்து ஒமிக்ரான் பாதிப்புகளும் விமான நிலையங்களில் இருந்து வரவில்லை என்பது உறுதி.. அது ஏற்கனவே இங்கே உள்ளது என்று அர்த்தம். உண்மையில், இந்தியாவின் பெரும்பாலான முக்கிய நகரங்களில் இந்த மாறுபாடு இருக்க வாய்ப்புள்ளது. இருந்தபோதிலும், இந்த மாறுபாடு மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கையை அல்லது இறப்பு விகிதத்தை அதிகரிக்கவோ வழிவகுக்கவில்லை என்பதை நாம் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த மாறுபாடு அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணி என்று கூறிய அவர் ” இந்த மாறுபாடு லேசானதாக இருந்தால், வரவிருக்கும் இரண்டு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும்.. அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பலர் கோவிட் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை நிறுத்திவிட்டனர்.. எனவே அவற்றை மீண்டும் பின்பற்ற வேண்டிய நேரம் இது.” என்று தெரிவித்தார்..

Right Click & View Source is disabled.

error: Content is protected !!