செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து மயங்க் அகர்வால் வெளியேறினார்

64views

பயிற்சியின்போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ளனர். டெஸ்ட் போட்டி இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இங்கிலாந்துடன் தொடங்கவிருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருந்த மயங்க் அகர்வால் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பந்து அவரது ஹெல்மெட்டில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் ஆட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய வீரர்களில் பேட்ஸ்மேன் ஷூப்மன் கில், ஸ்பின் ஆல்ரவுண்டர் வஷிங்டன் சுந்தர் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய மூன்று பேர் காயத்தால் வெளியேறியிருப்பது குறிப்பிடதக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!