ஆங்சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை..! மியான்மர் நீதிமன்றம் தீர்ப்பு
55
கடந்த பிப்ரவரி மாதம் மியான்மர் அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற 76 வயதான ஆங் சன் சூகியின் அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது.
அதையடுத்து ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்ளிட்டோரை ராணுவம் கைது செய்தது. அப்போது முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதாகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.