தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

209views
அரசு ஊழியர்களின் முறையீடு தொடர்பான அரசாணையில் வழங்கிய பாதுகாப்பை பறிக்கும் வகையிலும் காப்பீட்டு நிறுவனத்திற்கு ஆதரவாகவும், கடிதம் வெளியிடுள்ள நிதித் துறை செயலாளரின் செயலை கண்டித்தும், அக்கடிதத்தை (அரசு கடித எண் 30465/நிதி துறை (H 1) /2022
நாள் 17.9.22) உடனே திரும்ப பெறக்கோரியும் அனைவருக்கும் காப்பீட்டு அட்டை உடனே வழங்கக் கோரியும், அரசாணையின் படி கண்புரை அறுவை சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ 30,000/- மும், கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ 50,000/-மும் வழங்க மறுப்பது, புற்று நோய் சிகிச்சைக்கு உரிய தொகை வழங்க மறுப்பது உள்ளிட்டு ஊழியர் நலனுக்கு எதிரான செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் காப்பீட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் பெற்றோரை சார்ந்து வாழும் மகன் மகன் வயது எல்லை இல்லாமல் காப்பீட்டு திட்டத்தில் இணைத்து கொள்ளப்படுவார்கள் என சட்டமன்றத்தில் 110 விதியில் மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்ததை அமுல்படுத்த அரசாணை வெளியிட கோரியும், புற்றுநோய்க்கான
Oral chemotherapy உள்ளிட்ட நவீன சிகிச்சை முறைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைக்கக் கோரியும், கட்டணமில்லாச் சிகிச்சை (Cashless treatment) கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், காப்பீட்டு நிறுவனங்களின் மோசடிகளுக்கு தீர்வு காணக் கோரியும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட கருவூலம் முன்பு மாவட்டத் தலைவர் தோழர் உடையாளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கை விளக்கவுரை வழங்கினார் மாவட்ட செயலாளர் தோழர் பி சென்னமராஜ்.
வாழ்த்துரை புது சுகாதாரத்துறை அலுவலர் சங்க ர் தோழர் பவானந்தம் அவர்களும் தோழர் முஹம்மது ஆசிக் அவர்களும் சத்துணவு ஊழியர் சங்க தங்க மீனால் அவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தணிக்கையாளர் V P முருகன் அவர்களும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!