தமிழகம்

வேலூர் அடுத்த வேலங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா

324views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்தவல்லன் டராமம் அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா முன்னிட்டு அம்மன் மூலவர் அபிஷேகம் சந்தளகாப்பு தீபாரதனை இரவு புஷ்பரத்தில் ஊர்வலம், பின்பு ஏரித்திருவிழா நடந்தது.
இரவு அம்மன் புஷ்பரத்தில் வேலங்காடு வீதி சென்றார்.  வேலூர் மாவட்டத்தின் பலபகுதிகளிலிருந்து டிராக்டர், மாட்டுவண்டிகளில் பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மு. பாபு, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் அம்மனை வழிப்பட்டனர்.  ஏற்பாடுகளை இணை ஆணையர் லட்சுமணர், உதவி ஆணையர் நித்யா, ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் அண்ணாமலை, திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் அனைத்து கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!