தமிழகம்

வேலூர் அருகே வெட்டுவானம் எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி முதல் வெள்ளிக் கிழமை

34views
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பிரசித்து பெற்ற எல்லையம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் திரளாக வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.  அதன்படி ஆடி முதல் வெள்ளியன்று (21-ம் தேதி) அம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.  ஏரளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிப்பட்டு சென்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!