தமிழகம்

கே.வி.குப்பம் பசுமாத்தூரில் மனுநீதி நாள் முகாம் – வேலூர்ஆட்சியர் பங்கேற்பு

132views
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பசுமாத்தூர் வருவாய் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடந்தது.  உதவி ஆட்சியர் வெங்கடராமன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகவேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ரூ 73.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  தாசில்தார் கீதா, ஒன்றிய குழுத் தலைவர் ரவிச்சந்திரன், சமூகநலத்திட்ட தாசில்தார் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் ஜனனி, தலைமையிடத்து துணை தாசில்தார் வடிவேலு, துணை தாசில்தார் சங்கர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏழ்மைநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  பசுமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமாவதி நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!