தமிழகம்

காட்பாடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் துரைமுருகன்

66views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழகத்தின் 2 – ஆண்டு ஆட்சி சாதனை மலர் வெளியிடல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள், மலர் வெளியீடு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாபு, வேலூர் 1-வது மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா, தாசில்தார் ஜெகதீஸ்வரன், அரசு அலுவலர்கள், வருவாய்துறையினர், பயனாளிகள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!