தமிழகம்

வேலூர் அருகே கள்ளச்சாராயம் குடித்து கூலி தொழிலாளி உயிரிழப்பு? – மனைவி காவல்நிலையத்தில் புகார்

192views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஆசனாம்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குமரேசன் (52). இவர் நேற்று கூலி வேலை செய்துவிட்டு பகல் 3 மணியளவில் அப்பகுதியில்கள்ளச்சாராயம் விற்பனை செய்துவரும் குணசீலனின் மனைவி சுஜாதா என்பவரிடம்கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்து 4 மணியளவில் இறந்துவிட்டார். என் கணவர்கள்ளச்சாராயம் குடித்துவிட்டுதான் இறந்துவிட்டார். நான் என் பிள்ளைகளுடன் அனாதையாக உள்ளேன் என்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேப்பங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.  நேற்று முன்தினம் தான் விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில்கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அனைவருக்கும் தெரியும்.   வேப்பங்குப்பம் காவல்நிலைய உட்பட்ட பகுதியில்கள்ளச்சாராயம் அதிகயளவில் விற்கப்படுவதும், இந்த காவல்நிலையத்தில் பணியாற்ற காவலர்கள் தனது மேலதிகாரிகளுக்கு அதிகயளவு பணம் கொடுத்து இங்கு வேலைக்கு வருவதும் ஊரறிந்த விஷயம்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!