தமிழகம்

வேலூரில் வியபாரியிடம் ரூ 5 லட்சம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி வசூர்ராஜா கூட்டாளியுடன் கைது

166views
வேலூர் புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர் ராஜா (40). இவன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.  வேலூர்சத்துவாச்சாரி வீட்டுவசதி வாரிய குடியிறுப்பு பகுதியை சேர்ந்த பெயிண்ட் கடை உரிமையாளர் பாஷாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர்பு கொண்ட வசூர் ராஜா, தனக்கு ரூ 3 லட்சம் தரவேண்டும். இல்லை எனில் பாஷா மற்றும் குடும்பத்தை கொலை செய்துவிடுவதாக போனில் மிரட்டி உள்ளான்.  இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாஷா பெருமுகை பகுதியில் பைக்கில் சென்றபோது, பின்னால் காரில் வந்த வசூர் ராஜா, நாளை உன் கடைக்கு வருவேன். ௹ 5 லட்சத்தை தயாராக வைத்திரு, என்று மிரட்டி பாஷாவிடமிருந்த 20 ஆயிரம் ரூபாயை பறித்து சென்று உள்ளான்.  இதுதொடர்பாக பாஷா கொடுத்த புகாரின்பேரில் வேலூர் எஸ். பி.மணிவண்ணன் உத்தரவுப் படி தனிப்படை அழைக்கப்பட்டு பெருமுகையில் மறைந்து இருந்த ரவுடி வசூர் ராஜா மற்றும் கூட்டாளி டிரைவர் கார்ணாம்பட்டு வெங்கடேசனை போலீசார் தட்டி தூக்கி சிறையில் அடைத்தனர்.  தப்பி ஓடிய வசூர் ராஜாவுக்கு கையில் அடிப்பட்டு மாவு கட்டுபோடப்பட்டது.

செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!