தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட வேலூர் எம்.பி.கதிர் ஆனந்திற்கு வரவேற்பு !!

242views
வேலூர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் மாலை சென்னையிலிருந்து ரயில் மூலம் காட்பாடி வந்தார். அவருக்கு அங்கு வரவேற்பு திமுக வினரால் வழங்கப்பட்டது. ஊர்வலமாக வந்த திமுகவினர் சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு கதிர் ஆனந்த் மாலை அணிவித்து பின் கருணாநிதி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் பகுதி செயலாளர்கள் சுனில்குமார்(துணைமேயர்), வன்னியராஜா, பரமசிவம், ஒன்றிய செயலாளர் சரவணன், மாநகராட்சி 1-வது மண்டல தலைவர் புஷ்பலதா, மாநகராட்சி கவுன்சிலர் அன்பு. மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் காந்திநகரில் உள்ள கதிர் ஆனந்த் வீட்டில், ஆதராவாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!