தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ஏரளமான மக்கள் மனுக்கள் அளிப்பு

118views
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அங்குள்ள கெங்கையம்மன் கோயில் வளாகத்தில் நடந்தது. முகாமிற்கு அதிமுக பஞ்சாயத்து தலைவர் ராகேஷ் தலைமை தாங்கினார்.மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் திருமால் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். பின்பு முகாமை திருமால் பார்வையிட்டார். காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார், வருவாய், சுகாதாரம். மின்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், துணைத் தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர். கிராம வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!