தமிழகம்

வேலூர் அருகே அரசு புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு, தேன் பள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர்புகார்: அதிரடியாக மீட்ட காட்பாடி தாசில்தார் !!

166views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா தேன்பள்ளி ஊராட்சி வெங்கடாபுரம் அருந்ததி காலனி கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் தனிநபரான பெல் (மத்திய அரசு நிறுவனம்) கம்பெனியில் பணிபுரிந்த ஜெயராமன் (ஓய்வு), தேன்பள்ளி கிராம நத்தம்புல எண் : 225/29 காலிமனையை ஆக்கிரமித்து சிறிய கட்டிடம் கட்டி கிராம மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதை சுட்டிகாட்டி இடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீட்டு தரும்படி தேன்பள்ளி ஊராட்சி மன்ற 3 -வது வார்டு உறுப்பினர் கீதா வெங்கடேசன், கிராம மக்கள் ஆதரவுடன் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்தார். அதன்படி காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் உத்தரவுப்படி மேல்பாடி வருவாய் ஆய்வாளர், தேன் பள்ளி கிராம நிர்வாக அலுவலர் , உதவியாளர்களுடன் சென்று, இந்த காலிமனை அரசுக்கு சொந்தமான இடமாகும் என்ற அறிவிப்பு பலகை வருவாய்துறையால் வைக்கப்பட்டது. இதற்காக மாவட்ட ஆட்சியர், காட்பாடி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினருக்கு வார்டு கவுன்சிலர் கீதா வெங்கடேசன் மற்றும் கிராம மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!