தமிழகம்

வேலூரில், பா.ம.க. பொதுக்குழு கூட்டம்!! பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரை!!

20views
வேலூர் மாவட்டம், வேலூரில், தண்டபாணி திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசு பங்கேற்று சிறப்புரையாற்றினார். பாமக தலைவரை கௌரவிக்கும் விதமாக பா.ம.க.வினர் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அன்புமணி ராமதாசு பேசியதாவது:- மக்கள் நலன் கருதி குடிநீர் போக்குவரத்து, விவசாயிகளுக்கு ஏதுவாக ஆங்காங்கே நீர்த்தேக்க அணைகளை கட்டுதல், குறித்தும் சுமார் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் ரவி, ஜெகன், நல்லூர் சண்முகம் மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநிலத் துணைத் தலைவர்கள் என் டி சண்முகம் மற்றும் இளவழகன், உள்ளிட்ட திரளான பாமக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்த பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!