தமிழகம்

வேலூர் ஆகாஷ் எஜிகேஷனல் சர்வீஸில் மூன்று மாணவர்கள் நீட் யுஜி-ல் சாதனை!!

46views
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணா சாலை ஆகாஷ் எஜுகேஷனல் அலுவலகம், வேலூரில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் பயிற்சியில் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) பெருமிதத்துடன் அறிவிக்கிறது NEET UG 2025 தேர்வில் வேலூர் கிளையின் மூன்று மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவர்களின் அர்ப்பணிப்பு, கல்வி ஒழுக்கம் மற்றும் AESL வழங்கிய தரமான பயிற்சி மற்றும் வழிகாட்டலின் வெளிப்பாடாகும். தேர்வின் முடிவுகள் நேற்று தேசிய தேர்வுகள் அமைப்பு (NTA) வெளியிட்டது.
சிறந்த மாணவர்கள்: 1. ஆயுஷ் அபய் ஜி- AIR 310, 2.மோனிகா ஏ.என் – AIR 709 3.இஷான் அபிராஹம் பி- AIR 1131 ஆகிய மாணவர்கள் AESL-இன் வகுப்பறை பயிற்சி திட்டத்தில் பயின்றனர். இந்த திட்டம், உலகின் மிகவும் சவாலான மருத்துவ நுழைவு தேர்வுகளில் ஒன்றான NEET தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு துணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வெற்றிக்கு காரணமாக மாணவர்கள், AESL அளித்த திடமான கல்வி அடித்தளம், கருத்து தெளிவும், ஒழுங்கான படிப்பு பழக்கமும் குறிப்பிடுகின்றனர். மாணவர்கள் கூறியதாவது: “இந்த பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டிய ஆகாஷ் நிறுவனத்திற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். சீரான பாடத்திட்டம், நிபுணத்துவ கற்பித்தல் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டல் ஆகியவை எங்களை சிக்கலான தலைப்புகளில் வல்லவர்களாக மாற்றின. AESL இல்லாமல் இந்த வெற்றியை அடைய முடியாது.”
AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா, மாணவர்களை பாராட்டி கூறியதாவது:- “NEET UG 2025 தேர்வில் எங்கள் மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றிக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். நாடு முழுவதும் பங்கேற்புடன் நடைபெறும் இந்த தேர்வில் இவ்வளவு உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவது மிகவும் சிறப்பான சாதனை. இந்த வெற்றிகள் மாணவர்களின் உழைப்பையும், பெற்றோர்களின் ஆதரவும், எங்கள் கலவி குழுவின அர்ப்பணித்த உழைப்பையும் பிரதிபலிக்கின்றன. அவர்களின் மருத்துவ பயணத்திற்கு நாங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.”
NEET UG என்பது MBBS, BDS, மற்றும் AYUSH (BAMS, BUMS, BHMS உள்ளிட்டவை) போன்ற பட்டப்படிப்புக்களுக்கான தகுதி தேர்வாக தேசிய தேர்வுகள் அமைப்பு (NTA) ஆண்டுதோறும் நடத்தும் நுழைவுத் தேர்வாகும். இந்தியா மற்றும் வெளிநாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவ கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேவையான தேர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!