தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றும் சமுதாய நாய்களுக்கான தடுப்பூசி போடும் பணியில் ஈடுப்படும் பணியாளர்கள்

69views
வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தலில் வேலூர் மாநகராட்சி மாநகர அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் கால்நடை பராமரிப்பு துறை, மாநகராட்சி இணைந்து 4 மண்டலங்களிலும் தெருக்களில் சுற்றிதிரியும் சமுதாய நாய்க்களுக்கான தடுப்பூசி மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை பணியில் ஈடுப்படும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்படி செவ்வாய்க் கிழமை1-வது மண்டலம் காட்பாடி கழிஞ்சூர் இ.பி.காலனி, திருநகர் போன்ற பகுதியில் 28 சமுதாய நாய்களை பிடித்து வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது, மேலும் தடுப்பூசி போட்டவுடன் நாயின் உடம்பில் அடையாளம் குறிக்கப்பட்டது. பின்பு கருத்தடைசெய்யப்படும்இந்த பணியில் கால்நடை பராமரிப்புத்துளை மண்டல இணை இயக்குநர் திருக்குமரன், உதவி இயக்குநர் அந்துவன், கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள் பாண்டியன், திருஞானம், சந்தியா, கிருஷ்ணர், கால்நடைமிருக பாதுகாப்பு பயிற்சியாளர், துப்புரவு ஆய்வாளர் சாம், கர்ணல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!