தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர் சாலை விபத்தில் மூளை செயல்இழப்பு : 6 பேருக்கு வாழ்வு கொடுத்த மாணவர் சுரேந்தர் !!

113views
வேலூர் அருகே உள்ள அரப்பாக்கம் சிவராஜபுரம் அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், தாயார் விமலா, இவரது 2-வது மகன் சுரேந்தர் (23) வேலூர் ஊரீசு கல்லூரியில் பி.ஏ.(ஆங்கிலம்) மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 31-ம் தேதி பகல் 12 மணியளவில் பூட்டுத்தாக்கு – மேலக்குப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்துக்குள்ளானார். அவரை தீவிர சிகிச்சைக்காக சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 1-ம் தேதி மாலை மூளை செயலிழந்தது, இவருடைய குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி இருதயம்,நுரையீரல் சென்னை அப்போலோவிற்கும், கல்லீரல், சிறுநீரகம் சிஎம்சி (ராணிப்பேட்டை) மற்றொரு சிறுநீரகம் சென்னை காளியப்பா மருத்துவமனைக்கும், கண்கள் சிஎம்சி (வேலூர்) மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இறந்தும் மாணவர் சுரேந்தர் 6 பேருக்கு வாழ்வு கொடுத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!