தமிழகம்

வேலூர் அடுத்த இலவம்பாடியில் அதிக பால் கொடுத்த பசுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாராட்டு, பரிசு கொடுத்த பால்வளத்துறை !!

35views
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத்திற்கு உட்பட்டஇலவம்பாடியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தி நிலையத்தில் வேலூர் ஒருங்கிணைந்த பால்வளம் (ஆவின்) வம்சாவளி திட்ட பசுக்கள் அதிக பால் கறவை மாடுகளுக்கு பேட்ச் அணிவித்து கவுரவித்து விவசாயிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி இலவம்பாடியில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை பதிவாளர்(பால்வளம்) கோபி கலந்துகொண்டு பசுக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கினார்.
உதவி பொதுமேலாளர் லிடியா, திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், விஜயபிரபாகரன், மேலாளர் நரசிம்மன், மேற்பார்வையாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!