தமிழகம்

வேலூர் வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் !

25views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர்கள் சங்க மாநில அலுவலகம் உள்ளது.  இதில் 15-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு கலந்து கொண்டார்.
தோட்டக்கலைத்துறையில் பணி நிரந்தம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பணிக்கொடை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி தினக்கூலி பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ள தினக்கூலி அனைத்து பேரூராட்சிகளிலும் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சலுகைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக சம்பத் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் முனுசாமி, தாண்டவ மூர்த்தி, முத்துச்சாமி, பாலகிருஷ்ணன், மதன்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர்ஜெயப்பால் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!