தமிழகம்

வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் !

80views
வேலூர் மத்திய சிறை டிஐஜி ராஜலட்சுமி, குடியிருப்பில் உள்ள வீட்டில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆயுள் கைதியை வீட்டு வேலைக்கு முறைகேடாக பயன்படுத்தி கொடுமை செய்ததில் தான் காரணமாக சிபிசிஐடி காவல் துறை வழக்கு பதிவு செய்து டிஐஜி , கூடுதல் எஸ். பி. காவலர்கள் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
சென்னை சரக சிறை துறை டிஐஜி முருகேசனுக்கு வேலூர் சரக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  நகை மற்றும் பணம் திருடியதாக ஆயுள் தண்டனை கைதியை இந்த 14 பேர் சித்ரவதை செய்த புகாரில் சிபிசிஐடி தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. இதில் வேலூர் சிறை துறை டிஐஜி ராஜலட்சுமி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!