தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி சேவூரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த அமைச்சர் துரைமுருகன் !!

94views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கினார். 5 வருவாய் கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.  வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், அமுலு, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன் மற்றும் துறை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!