தமிழகம்

மோப்ப நாய் “சாரா” வேலூர் எஸ்.பி.யிடம் ஒப்படைப்பு!

89views
வேலூர் மாவட்டத்தில் மோப்பநாய் பிரிவிற்கு சாரா என்ற பெண் மோப்ப நாய் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.  மேற்படி மோப்பநாய் சாரா குற்றங்களை கண்டறிவதற்காக ஏற்கனவே வேலூரில் 6 மாத அடிப்படை பயிற்சி முடித்துள்ளது.
பின்னர் சென்னை செயின்ட் தாமஸ் மோப்ப நாய் பிரிவு தலைமையகத்தில் 6 மாதங்கள் நவீன பயிற்சி எடுத்த பின்னர், வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். மணிவண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அதன் பயிற்சியாளர்கள் மோப்ப நாய் சாராவுடன் எஸ்.பி.,யிடம் அறிக்கை செய்தனர்.
மேற்படி சாரா வேலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஈடுபடுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!