தமிழகம்

வேலூர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியை பணிநிறைவு மற்றும் பாராட்டு விழா

79views
வேலூர் தொரப்பாடியில் அரசு பொறியியல் கல்லூரி இயங்கிவருகிறது. அதில் 36 ஆண்டுகாலமாக மின்னணு மற்றும் மின்னணுவியல் தொடர்பு துறையில் பயிற்றுநர், உதவி பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவர் என பல பணியில் சிறப்பாக பணிபுரிந்தவர் டாக்டர் ரகீலாபேகம். இவர் கடந்த 31-ம் தேதி பணிநிறைவு செய்தார்.  அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா கல்லூரியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு பொறுப்பு முதல்வர் டாக்டர் ஸ்ரீராம்பாபு தலைமை தாங்கினார். முன்னாள் இக்கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரகீலா பேகம் ஆற்றிய பணிகள் குறித்து நினைவுகூர்ந்தார்.  பேராசிரியர்கள் பிரவீன்ராஜ், கலைவாசன், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!