தமிழகம்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறுவதில்லை என திமுக கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

110views
வேலூர் மாநகராட்சியின் மே மாதம் கூட்டம் 24-ம் தேதி நடந்தது.  இதில் ஆணையர் ரத்தினசாமி,மேயர் சுஜாதா, துணை சுனில்குமார், பொறியாளர், உதவி ஆணையர்கள், மாநகரசுகாதார அலுவலர், மண்டல சுகாதார அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இதில் திமுக கவுன்சிலர்கள் சுகாதாரமின்மை, நாய்கள் தொல்லை, கழிவுநீர் கால்வாய் பிரச்னை, போர்வெல், தண்ணீர் பிரச்னை என்று புகார்களை கூறினர்.
ஆனால் ஆணையர், மேயர், அதிகாரிகள் மழுப்பி பதில்கூறினர்.  ஆணையர் மற்றும் மேயர் இடையே உள்ள பனிப்போர் மற்றும் செய்யாத வேலைக்கு பில்போடும் பிரச்னை தொடர்ந்து இந்த மாநகராட்சியில் நடந்துவருகிறது.  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்துயடிப்பது குறித்து ஆணையர் மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கி டையே வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்தது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!