தமிழகம்

சி.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கிய வணிகர் தின விழா

43views
சென்னை விஜிபி தங்கக் கடற்கரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் நாற்பதாவது வணிகர் தின விழா மற்றும் சுதேசி விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.  பேரவையின் மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் துவக்க உரையாற்றினார்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.  விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை M.ஜெகன்மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் இரவி பச்சமுத்து, முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, ஜெயக்குமார்,எஸ்.ஆர்.சண்முகநாதன், அனைத்து மக்கள் அரசியல் கட்சி மாநில தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா, அ.தி.மு.கழக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், அ.திமு.க தென் மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் கே.சி.ராஜா, மாநில பொருளாளர் சி.பொன்னுசாமி, மாநில இளைஞர் அணி தலைவர் காஞ்சி ப.ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சியை சொல்லின் செல்வன் கவிஞர் சி.தமிழ்ச்செல்வன் தொகுத்து வழங்கினார்.  நிறைவாக கோயம்பேடு பூமிநாதன் நன்றி கூறினார்.

செய்தியாளர் : வினோத்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!