தமிழகம்

சென்னை-கோவை இடையே செல்லும் வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நிற்காது

92views
சென்னை – கோவை இடையே வந்தே பாரத்ரயில் துவக்கவிழா வரும் 8-ம் தேதி சென்னை சென்ட்ரலில் பாரத பிரதமர் மோடி துவக்கிவைக்கிறார்.  அதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.  8 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டு  இருக்கும்.  திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில்நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.  காட்பாடி ரயில்நிலையத்தில் இந்த ரயில் நிற்காது.  இந்த சோதனை ஓட்டம் நல்லமுறையில் நடந்தது.
காட்பாடியில் இந்த ரயில் நிற்க நடவடிக்கை எடுக்கும்படி வேலூர், காட்பாடி பொதுமக்கள் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  சென்னை-மைசூரு வந்தே பாரத்ரயில் காட்பாடியில் நின்று செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!