Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது

94views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம்.
இந்த மடத்தில் 11 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு சுமார் 3 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கும், ஞான விநாயகர் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த கோவிலின் குடமுழுக்கு விழா இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும் ஞான விநாயகர் சிலைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  இந்த குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருவள்ளுவர் மற்றும் ஞான விநாயகர் கோவிலின் குடமுழுக்கு பூஜையுடன் தரிசனம் பெற்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!