தமிழகம்

பைரவிக்கு வளைகாப்பு – உசிலம்பட்டியில் செல்ல நாய்க்கு வளைகாப்பு கொண்டாடிய இளைஞர்.

84views
மங்கையறாய் பிறந்திட மா தவம் செய்தேன் என்பார்கள் ஆனால் உசிலம்பட்டியில் இன்றளவும் பெண் சிசுக்கொலை அரங்கேறி வரும்; ஊரில் பெண் நாயை தன் சொந்த மகளாக நினைத்து அதற்கு வளைகாப்பு அசத்தியுள்ளார் உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குஞ்சா வீரணத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் வீரணா ராஜீவ் (35).விலங்குகள் மீது மிகுந்த பற்று கொண்டவரான இவர் தனது தோட்டத்து வீட்டில் மாடுகள் ஆடுகள் வாத்து புறாக்கள் சேவல் கோழிகள் நாய்கள் பல உயிரினங்களை வளர்த்து வருகின்றார்.இதில் 10க்கும் மேற்ப்பட்ட ராஜபாளையம்- கோம்பை பேன்ற நாட்டு இன நாய்களை வளர்த்து வருகின்றார்.ஆண் நாய்கள் மட்டுமல்லாமல் பெண் நாய்களையும் பாசத்துடன் ஒவ்வொன்றின்கும் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
இந்த நாய்கள் ஆடு மாடு தோட்டம் வீட்டை பாதுகாப்பது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் நாய்கள் கண்காட்சியிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றுத் தந்துள்ளன.இந்நிலையில் இவர் வளர்த்து வரும் நாய்களில் ஒன்றான பைரவி என்ற பெயர் கொண்ட பெண் நாய் கர்ப்பமாக இருந்துள்ளது.பைரவியின் மீது அலாதி பிரியம் கொண்ட ராஜீவ் தனது மகள் கர்ப்பமாணதைப் போல் மிகுந்த மகிழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் பைரவிக்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்தார்.
இதன்படி தன் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் பைரவியை (நாயை) குளிப்பாட்டி சேலை அணிவித்து நகை மல்லிகைப்பூ அணிவித்து கண் மை போட்டு நெற்றி கால்களில் மஞ்சள் குங்குமம் இட்டு உறவினர்கள் மத்தியில் பைரவிக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு விழா கொண்டாடினர்.பின்னர் வந்திருக்கும் அனைவருக்கும் உணவு விருந்தளித்தனர்.
பெண் நாய்களை பலரும் வெறுத்து வீட்டிற்கு விடாத பட்சத்தில் ராஜீவ் பெண் நாயை வெறுக்காமல் அதனை வளர்ப்பதோடும் மட்டுமல்லாமல் நாய்கள் கண்காட்சி போன்றவற்றிக்கு அழைத்து சென்று அதன் மூலம் வருமானமும் ஈட்டி வருகின்றார்.  பெற்றோர்களையே வெறுக்கும் இக்காலத்தில் பெண் நாயை தன் மகளாக பாவித்து சீமந்தம் கொண்டாடிய இளைஞர் பாராட்டுக்குரியவர்தான்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!