தமிழகம்

உசிலம்பட்டி அருகே 32 ஆண்டுகளுக்கு பின் சந்தித்து கொண்ட 78 கிட்ஸ் முன்னாள் மாணவர்கள்

45views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி., இந்த பள்ளி அரசு நடுநலைப்பள்ளியாக இருந்த போது கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் 1991 வரை பயின்ற மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் 32 ஆண்டுகளுக்கு பின் இன்று சந்தித்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.,
96 படத்தை போன்று தங்கள் பிறந்த ஆண்டான 1978 ஆம் ஆண்டை குறிக்கும் வண்ணம் 78 கிட்ஸ் சந்திப்பு என்ற கேக் வெட்டியும், கடைசியாக பிரிந்து சென்ற ஆண்டு எடுத்த குழு புகைப்படத்தை காட்சி படுத்தியும் முன்னாள் மாணவர்கள் தங்கள் சக மாணவர்களுடன் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.,
சுற்றுப்புறத்தில் உள்ள 18 கிராமங்களிலிருந்து இந்த அரசு பள்ளியில் பயின்று இன்று வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் என பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் இந்த பழைய மாணவர்கள் இன்று 32 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்தாகவும், முதற்கட்ட சந்திப்பாக இது அமைந்திருந்தாலும் அடுத்தது தொடர்ந்து சந்தித்துக் கொள்வதோடு தங்கள் பள்ளிக்கும், பள்ளி வளர்ச்சிக்கும் உதவும் முடிவில் ஒன்றிணைந்தாக முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.,
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!