தமிழகம்

தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக, உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பு – கெங்கவல்லி பேரூரில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

67views
தமிழக அமைச்சரவையில்  புதிய அமைச்சராக,  உதயநிதிஸ்டாலின் இன்று பதவியேற்றதன் காரணமாக கெங்கவல்லி பேரூர் கழகத்தின் சார்பாக பேரூர் கழக செயலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் திருமதி. சு.லோகாம்பாள், துணைத் தலைவர் திருமதி. மருதாம்பாள் நாகராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திரு.பிரகாஷ், பேரூராட்சி கவுன்சிலர்களான தங்கபாண்டியன், ஹம்சவர்தினி குமார், சையது, முருகேசன், அருண்குமார், கவிதா செந்தில் ,பேரூர் கழக துணை செயலாளர் பாண்டியன், பொருளாளர் மூர்த்தி மற்றும் கழக முன்னோடிகளான பாலசுப்பிரமணியம், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, தர்வேஸ், கருப்பண்ணன், தனசேகர், முருகேசன், லட்சுமணன், மற்றும் இளைஞர் அணியைச் சார்ந்த செல்வ கிளிண்டன், மணிகண்டன், அபிஷேக், பிரபு மற்றும் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!