தொலைக்காட்சி

துர்காவாக வந்திருப்பது யார்? – கௌரி மூலம் உண்மைகள் வெளிவருமா..?

55views
கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கெளரி”. இந்த தெய்வீகத் தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட துர்கா, உயிருடன் வந்தது எப்படி என்கிற கேள்வியுடன் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
அசோக்குக்கு தெரியாமல் ஆவுடையப்பனின் குடும்பம், துர்காவை கடத்தி கொலை செய்கிறார்கள். ஆனால், அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில், துர்கா உயிரோடு வர ஆவுடையப்பனின் குடும்பமே குழம்பி தவிக்கிறது. எனினும் துர்காவின் நடத்தையில் சந்தேகம் வர, வந்திருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க பல்வேறு திட்டங்களை தீட்டுகிறார்கள். ஆனால், இவர்களின் திட்டங்களை அனைத்தும் தோல்வியில் முடிய, இறுதியாக கௌரியை வைத்து துர்கா ரூபத்தில் வந்திருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், ஆவுடையப்பனின் வீட்டுக்கு வரும் கௌரி பல்வேறு சோதனைகளை நடத்துகிறாள். இதில் உண்மைகள் வெளிவருமா என்கிற பரபரப்பான சூழலில் கதை நகர்ந்து வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!