தமிழகம்

ஆம்பூர் அருகே கடனை திருப்பி தராததால் ஆத்திரம் 2 குழந்தைகள் கொலை..

14views
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு ரோகித் (6) தர்ஷன் (4) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோகராஜின் நண்பர் வசந்த்.யோகராஜ் வசந்திடம் ரூ 14 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கடனை கேட்ட போது காலம் தாழ்த்தி உள்ளார். தன்னுடைய மனைவியை பிரிந்த நிலையில் வசந்த், நண்பர் யோகராஜின் 2 குழந்தைகளை திண்பண்டம் வாங்கி தருவதாக அழைத்து சென்று கொலை செய்து உள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயில் பின்புறம் சடலமாக கிடப்பதாக தகவல் அறிந்த காவல் துறையினர் குழந்தைகளின் சடலைத்தை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர விசாரணைக்கு பின்பு வசந்தை காவல் துறையினர் கைது செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!