தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது ‘திருமண நாளன இன்று கோவிலில் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்

104views
ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 70 திருமணங்கள் நடைபெற்றது. மேலும் மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது காலை ஆறு மணி முதல் கோவிலில் பதிவு பெற்றவர்கள் திருமணங்கள் செய்ய வரிசையாக காத்திருந்தனர். பின்னர் திருமணம் செய்ய வந்த அவர்களின் சான்றிதழ்கள் பதிவுகள் சரிபார்க்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது .

திருமண முகூர்த்த நாளான இன்றுதிருமணம் வீட்டார் தவிர ஏராளமான சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 23ஆம் தேதி 63 திருமணங்கள் நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் முடிவையொட்டி ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!