தமிழகம்

செங்கோட்டை அரசு மருத்துவ மனையில் வெற்றிகரமாக நடந்த கர்ப்பப்பை அறுவை சிகிச்சை

62views
செங்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் வல்லம் பகுதியை சேர்ந்த முருகேஸ்வரி என்ற 46 வயது பெண்மணிக்கு சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட கட்டியுடன் கூடிய கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை முதல் முறையாக செங்கோட்டை அரசு மருத்துவமனையில் 25.05.23 அன்று வெற்றிகரமாக நடந்தது.
இங்கு தென்காசி மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பிரேமலதா MD,GGO திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளியின் அவசரம் மற்றும் அவசியத்தை கருத்தில் கொண்டு மருத்துவ துறையில் சிறந்த அனுபவமிக்க இணை இயக்குனர் அவர்களே தன்னை அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் இணைத்துக் கொண்டு அவரது தலைமையிலான மருத்துவ குழுவினர்களால் அறுவை சிகிச்சை சிறப்பாக வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. நோயாளி நலமுடன் உள்ளார். மேலும் தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!