தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கை; மாவட்ட ஆட்சியர் தகவல்

53views
தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2023-2024 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு விடுதி சேர்க்கை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தென்காசி மாவட்டம் சார்பாக 2023-2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்காக விளையாட்டு விடுதி தேர்வு நடத்தப்பட உள்ளது. 6ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பிற்கு விளையாட்டு விடுதி சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கான விளையாட்டு விடுதி தேர்வும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள், விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை 16.05.2023 முதல் http://www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் 24.05.2023 அன்று காலை 7.00 மணியளவில் ஆலங்குளம் தாலுகா, சிவலார்குளம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மினி விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளதால் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04633 212580 மற்றும் 9786918406 என்ற எண்ணை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!