மதுரையில், கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் வழங்க, கிராம நிர்வாக அதிகாரி, 250 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சம்மந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மதுரை மேலமடை பகுதியில் உள்ள விஏஓ அலுவலகத்தில், யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவர், கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழுக்காக விண்ணப்பத்து இருந்தார். அப்போது சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி ரமணி என்பவர் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அப்போது முதல் தவணையாக 250 ரூபாயை கொடுக்கும் போது, அந்த காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு உள்ளது.
லஞ்சம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ரமணியை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ரமணி மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டும் உள்ளது.
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.