தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலை பார்த்து ரசித்த கர்நாடக கவர்னர்

21views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவால் அமைக்கப்பட்டுள்ள தங்க கோயிலை தினமும் பல ஆயிரம் பேர் வந்து பார்வையிட்டு தரிசனம் செய்து செல்கின்றனர்.  இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநில கவர்னர் தாவார் சந்த் கெலெட் தங்க கோயிலை சுற்றி பார்த்தார். லட்சுமி மற்றும் நாராயணன் சுவாமி சிலையை வணங்கிய ஆளுநருக்கு கோயில் மரியாதை செய்யப்பட்டது.  பின் சக்தி அம்மாவை சந்தித்து குடும்பத்துடன் ஆசி பெற்றார். உடன் பொற்கோயில் இயக்குநர் சுரேஷ்பாபு, நாராயணி பீடமேலாளர் சம்பத் உள்ளிட்டோர் இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!