தமிழகம்

காட்பாடி காங்கேயநல்லூரில் வாரியார் சுவாமியின் ஜெயந்தியை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அன்னதானம் !!

27views
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநெல்லூரில் திருமுருககிருபானந்தவாரியாரின் 119-வது ஜெயந்தியை முன்னிட்டு அங்குள்ள ஞானதிரு வளாகத்தில் அமைந்துள்ள அவரின் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர் சுப்புலெட்சுமி, செய்தி தொடர்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தை பக்தர்களுக்கு வழங்கினார்.
எம்.எல். ஏ. கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், மண்டல தலைவர் புஷ்பலதா. மாநகராட்சி ஆணையர், உதவி ஆணையர், சுகாதார அலுவலர் சிவக்குமார், வேலூர் செய்தி துறை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!