தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு அகத்தியர் ஞானதேவி திருக்கோயிலில் ஞானாலயம் தியான நவபீட ஆலைய கும்பாபிஷேகம்

95views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கிரிவலைப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு அகத்தியர்_ஞானதேவி திருக்கோயிலில் ஞானாலயம், தியானம்.மற்றும் நவபீட நூதன ஆலய கும்பாபிஷேகம் நடந்தது.
விநாயகர் பூஜை, யாக கலசபூஜை, கடம்புறப்பாடு, கும்பாபிஷேகம் பின்பு மகாதீபாரதனை நடைபெற்றது.  மரக்கன்று நடும் விழா, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதி ஞானாலய குருமார்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை வள்ளிமலை அகத்தியர்_ஞானதேவி திருக்கோயில் ஸ்தாபகர் குருஜி ஆனந்தன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!