தமிழகம்

வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயில்களில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு வள்ளிதெய்வானையுடன் அருள்பாலித்த ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி

117views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசி மாத கிருத்திகை முன்னிட்டு காலையில் வள்ளிதெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமிகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

அதேப்போல் வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் காலையில் வள்ளிதெய்வானை பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன, ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை, செயல் அலுவலர் பரந்தாகண்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!