தமிழகம்

காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாணம் கோலாகலம், ஏரளமான பக்தர்கள் தரிசனம்

36views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 4 நாட்கள் நடைபெற்றது. இறுதிநாளான திங்கள்கிழமை மாலை திருத்தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்து நிலைநின்றது. ஏரளமான பக்தர்கள் வேண்டினர்.
செவ்வாய்கிழமை மார்ச் 3-ம் தேதி காலையில் வள்ளியம்மை, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. வள்ளியம்மாள் மற்றும் முருகபெருமானுக்கு பக்தர்கள் மொழி எழுதினர். வள்ளி அம்மையின் தாய்வீட்டு சீதனத்தை பரம்பரை வேடவர் குல மக்கள் கொண்டுவந்து படைத்தனர். ஏரளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புதியதாலிக்கயிறு மஞ்சள் மற்றும் குங்குமம் வழங்கப்பட்டது.
வள்ளி அம்மையின் தனி சன்னதியில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடந்தன.  ஏற்பாடுகளை தேர்விழா கமிட்டி, அறங்காவலர் குழுவினர், திருக்கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!