தமிழகம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த 66, புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடித்திருவிழா முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து கொண்டாட்டம்

261views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்தவேலுர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகில் உள்ள 66, புத்தூர் அசிரீர்மலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பரணி காவடிமுன்னிட்டு காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சனிக்கிழமை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகன், வள்ளிதெய்வானையை வழிப்பட்டனர். மத்தியம் பக்தர்களுக்கு அன்னதானம் போடப்பட்டது. இரவு சமூக நாடகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்.விழா குழுவினர், நாட்டாண்மை தாரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!