தமிழகம்

வேலூர் அருகே இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி விசாகபிரமோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் !!

36views
வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி 3-ம் ஆண்டு பிரமோற்சவம் கொடி ஏற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. கோயில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை கொடிமரத்துக்கு பூஜை செய்து மயில்கொடியினை ஏற்றிவைத்தார்.  முன்பாக வினாயகர் பூஜை, உற்சவம், வெள்ளி மூஷிக வாகன உற்சவம் நடந்தது. வரும் 11-ம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெறும். மலையின்கீழ் தங்க அங்கி அணிந்த தங்கவேல் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பால முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!