தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்அலைமோதிய ஐயப்ப பக்தர்கள் கூட்டம். 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

69views
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி கோவிலில் கார்த்தி மற்றும் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இன்று காலை 7 மணி முதல் தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசனம் செய்தனர்.
காலை முதலே ஐயப்ப பக்தர்கள் வருகையால் கோயில் மற்றும் தெருக்களில் கூட்டமாக காணப்பட்டது.  இதனால் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாடி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!