தமிழகம்

கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை ஒட்டி ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு 1008 சங்காபிஷேகம் – ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய கோஷம் .

104views
மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாசி விசுவநாதர் திருக்கோயிலில், கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகத்தில் , காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது .

முன்னதாக யாக சாலையில் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கலச தீர்த்தங்கள் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீ காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் நடைபெற்றது .இதனை தொடர்ந்து மலர்களால் காசி விஸ்வநாதரை அலங்கரித்து , தீப, தூப ஆராதனைகளுடன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது .  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என்ற கோஷத்துடன் வழிபட்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!