தமிழகம்

காட்பாடி அருப்பு மேடுப்பள்ளியில் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல்

78views
வேலூர் அடுத்த காட்பாடி அருப்புமேடுமாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.  காட்பாடி ரெட்கிராஸ் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.  வேலூர் மாநகராட்சி உறுப்பினர் டீட்டா சரவணன் இனிப்பு பொங்கலை மாணவ – மாணவிகளுக்கு வழங்கினார்.  செயலாளர் சிவவடிவு, துணைத்தலைவர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் பழனி, ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக் கண், ரமேஷ்குமார் ஜெயின், காந்தி லால் பட்டேல், லட்சுமிநாராயணன், ஆசிரியை பூங்குழலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!