“தோழமை என்றொரு பெயர்” – நூல் விமர்சனம்
"தோழமை என்றொரு பெயர்" என்ற தோழர் ஆசுவின் கவிதை நூல் முழுவதும் படித்த பெரும் கணத்திலிருந்து' எழுதுகிறேன். எந்த இசங்களுக்கும் உட்படாமல், சொற்களை வலிந்து திணிக்காமல் அவரைப்போலவே கவிதைகளும் மிக எளிதான சொற்களில் நெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் உட்பொருள் தத்துவார்த்த மிக்க ஆழ்ந்த கணத்தையும் உணர்த்துகிறது. நாம் வெகுசாதாரணமாக தினமும் பார்த்து கடந்துவிடுகிற பல காட்சிகளை ஆசு நின்று நிதானித்து அதன் உள்ளார்ந்த தத்துவங்களை இயற்கை+ உயிர்கள்+மனிதன்+நேயம்+நட்பு =அன்பு. என்பதாக...