archiveகவிதை

கவிதை

சர்வதேச மகிழ்ச்சி தினம்

அத்தாவுல்லா நாகர்கோவில் என்றைக்கு இந்த நாட்டில் ஏழை சிரிக்கிறானோ.... என்றைக்கு உழவன் வயிறார உண்கிறானோ... என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவிலும் தனியாக நடந்து போக முடிகிறதோ... என்றைக்கு தாழ்த்தப்பட்டவனும் கல்வியால் தலைநிமிர்கிறானோ... என்றைக்கு நீதியும் நேர்மையும் இல்லாதவன் கைகளுக்கும் எளிதாக எட்டுகிறதோ... என்றைக்கு நல்லவர்கள் நாடாள வருகின்றார்களோ... என்றைக்கு மக்கள் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றனவோ... என்றைக்கு கொள்ளை நோய்களும் கொத்துக் கொத்தான மரணங்களும் இல்லாது ஒழிகிறதோ.... எங்கே குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களோ......
கவிதை

மண் சுவாசம் பெற்றார் விண் பெண்மணி சுனிதா

மேலே சென்ற உயிர் மீண்டும் பூமிக்கு வந்தது மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் அமைத்த மகாசக்தியின் மறு அவதார தினம் இன்று மாதராய் பிறந்த இவருக்காய் மாதவம் செய்தது பூமி பாரதியின் கனவை நனவாக்கியவளே தொடங்கட்டும் உன் புது பயணம் புலரட்டும் புது வாழ்வு மலரட்டும் மானுடம் - உதயம் ராம்...
கவிதை

1930 – உடனடி அதிரடி ஹீரோ

பணம் காசு பரிசு தருவாங்கன்னு கேட்கின்ற விபரங்களை கொடுத்து விடாதே ஒரு பைசா ஒருத்தனுக்கு இலவசமா எவன் கொடுப்பான் எதுக்கு கொடுப்பான் தப்பேதும் செஞ்சதாக மிரட்டல்கள் வந்தாலே பயந்துகிட்டு பணம் எதுவும் அனுப்பி விடாதே நல்லவனா நீயிருக்க அபராதம் கட்டச் சொல்லி எவன் கேட்பான் எதுக்கு கேட்பான்? வலைதள வாழ்க்கையில் சூழ்ச்சிகள் இருக்குது வளரும் தொழில்நுட்பத்தில் ஆபத்தும் இருக்குது பேராசை பெரு நஷ்டம் மீள்வது மிகக் கஷ்டம் புரிஞ்சுக்கோ நல்லா...
கவிதை

இந்த பூமிக்கு மலர்ச்சி…அவள்தான்

அத்தாவுல்லா நாகர்கோவில். இந்தப் பூவுலகில் உயிர்ப்பு சக்தி அவள்தான்... உயிர் தந்து பழக்கப்பட்டவள் ஒவ்வொரு உயிரிலும்... உயிர்ப்பிப்பதிலும்... உயர்த்துவதிலும்... ஒன்றும் தெரியாமல் பின் நிற்பதிலும்... எல்லா தவங்களும் தாய் பெயரை முன்மொழிகின்றன.. எல்லா வரங்களும் அவள் காலடியில் குவிகின்றன... சாந்தி மய சமாதானத்தின் பேருருவாய் அவள் அமைதியாக இருக்கிறாள்... பல்வேறு வடிவங்களின் பரிணாமங்களை நீங்கள் அவளுக்குள் வைக்கிறீர்கள்... தாயாக... தாரமாக.... மகளாக ... பேத்தியாக.... அவள் எல்லா சக்திகளையும் பூட்டிய...
கவிதை

மாண்புறு மகளிர்

தன்னின் கனவுகளை தன்னாயுள் வரையே தன்னுள் சுமப்பவள் துன்பத்தை விரட்டி இன்பம் நிலைபெற என்றென்றும் போராடி வென்றே தீருவாள் வாகை சூடிடவே! அனலாய் புனலாய் அறிவால் அவனியிலே தனித்துத் தெரிவாள், துணைவ னின்றியே தனியாய் வாழும் சக்தியைக் கொண்டாலும் தன்னலம் கருதாமல் துணையுடன் இணைந்திருப்பாள் வீட்டில் அடைத்து வதைத்தோரும் வியந்திட பூட்டிய அறையில் பொசுக்கியோரும் வாழ்த்திட பாட்டன் பாரதிப் பெண்ணாய் வாழ்ந்திட காட்டு ஆறாய் களத்தில் இறங்கிடுவாள்! நிலவில் மாந்தர்...
கவிதை

வேண்டாம் மும்மொழி வழக்கு

அத்தாவுல்லா, நாகர்கோவில் அந்தந்த நதிகளை அவ்வவற்றின் திசைகளிலேயே நடக்க விடுங்கள்... நதிகள் நடப்பதுதான் நாட்டிற்கு அழகு... அவற்றை வலிந்து திருப்ப முனையாதீர்கள் ... அது ஒரு வகையில் வம்படி வழக்கு... தாய் முலைக்காம்பில் சுரப்பதெல்லாம் பிள்ளைகளுக்குத்தான் .. நீங்கள் ஏன் கள்ளியின் பாலை புகட்டச் சொல்கிறீர்கள்? கருத்தடையில் கொன்றது இல்லாமல் மீறிப் பிறந்த பிறகு ஏன் இன்னொரு பிள்ளைவதை செய்கிறீர்கள்.... மாடுகளை மட்டும் சுற்றி வராமல் உலக மாநாடுகளையும் சுற்றி...
கவிதை

மணிநேர காத்திருப்பு…!!!

உச்சி மேகத்தின் திடீர் மழைக்கு அத்தனை பொருட்களையும் அவசரக் கதியில் மூட்டை கட்டுகிறான் சாலையோர சந்தை வியாபாரி நொடி ஒன்று நிமிடமாவதற்குள் பொழிந்த மழை ஒளிந்து கொண்டது கட்டிய மூட்டையின் முடிச்சை அவிழ்ப்பதற்குள் கொடுத்தக் கடனின் தவணை பாக்கிக்காய் வசை மொழி பாடுகிறான் வயிறு பெருத்த தனவான் அடுத்த மழையை கணிக்கும் சாக்கில் அண்ணாந்து பார்த்தவன் அவிழும் கண்ணீருக்கு அணை கட்டிக் கொள்கிறான் ஈரக்கடியில் கடை விரித்தவன் இன்றைய பிழைப்பிற்கு...
கவிதை

தீயும் கவ்வும்…

அத்தாவுல்லா நாகர்கோவில். நின்று நின்று எரிந்தன அன்று காசாவும் சுற்றுப்புறங்களும்... நாசாவும் நாசத்தின் தூதர்களுமாக வைத்த நெருப்பில்... உயர்ந்த மேடுகளும் பக்கத்துக் காடுகளும் மக்கள் வீடுகளும்.... மிஞ்சியதெல்லாம் மனிதக் கூடுகளும் பிள்ளைகள் பெண்கள் சாம்பலும் ... யார் என்று தெரிந்தும் எதுவும் செய்ய முடியவில்லை எங்களால் செய்ய முடிந்தவர்களும் செய்ய முடியவில்லை கைகட்டி நா கட்டிய சூழ்ச்சிகளால் ... எல்லாம் இழந்தும் இழக்காமல் இருந்தது , பாலஸ்தீனியரின் நம்பிக்கை நெருப்பு...
கவிதை

புனித நதிகள் ?

அத்தாவுல்லா, நாகர்கோவில். தரிசனங்களின் திருமுகங்கள் என்கிறார்கள் ... புனிதங்களின் நீர்த்துறைகள் என்று பூசுகிறார்கள்... உங்களுடைய சுவனங்களின் கடைதிறப்பு அகோரிப் பிணங்களின் ஆடம்பர ஆட்டங்களிலா ஆரம்பமாகிறது ? ஆன்மீகம் சுமந்த ஆற்றுப்படுகைகள் எல்லாம் இப்போது இங்கே பிணம் சுமந்த சேற்றுப்படுகைகளை விட மோசமான நாற்றப்படுகைகள் ஆகிவிட்டன ... உங்கள் புனித நதிகளில் புனிதர்கள் வந்து நீராடிப் போகட்டும் பாவம் மனிதர்கள்... இந்த அப்பாவிகள் விட்டு விடுங்கள்.... கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும்...
கவிதை

ஆதலால் காதலிப்பீர்…

அத்தாவுல்லா நாகர்கோவில். ஒரு பூ புரட்டிப்போட்டு விடுகிறது இந்தப் பூலோகத்தை ... ஒரு புன்னகை தடுமாறச் செய்து விடுகிறது கடின மனப் பாறைகளை ... ஒரு மென்னதி தடை மேடுகளையும் கடந்து எல்லைகளைத் தாண்டியும் பாய்கிறது தடுப்பணைகள் இல்லாமலே.... நிலவுக்கும் கதிருக்குமான சூட்டுத் தன்மைகள் கூட உணர முடியாமல் செய்து விடுகிறது ஒரு நட்சத்திரச் சிதறல்... சின்னச் சின்ன அசைவுகளும் இசைவுகளும் உலகையே நகர்த்திக் கொண்டிருக்கின்றன ... யார் எவருக்காகவும்...
1 2 3 14
Page 1 of 14

Right Click & View Source is disabled.

error: Content is protected !!